Breaking News

மைத்திரிக்கு 53 வீத வெற்றி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 53  வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என கொழும்பு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. 


  இதில் வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களின் சிங்கள மக்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வுகளின் படியே மைத்திரிபால வெற்றி பெறுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

 மேற்படி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான கலாநிதி லலிதசிறி குணருவன் மற்றும் கலாநிதி டீ .எஸ். ஜெயவீர ஆகியோர் தலைமையில் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.