Breaking News

எயார் ஏசியா விமானத்தின் பாகங்கள் ஜாவா கடல் பகுதியில்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன எயார் ஏசியா விமானத்தினுடையது என நம்பப்படும் பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஜாவா கடற்பகுதியிலேயே இவை அடையாளங் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எயார் ஏசியா QZ8501 விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணிக்கும் வழியில் காணாமல் போனது. இதன்போது விமானத்தில் மொத்தமாக 162 பேர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.