Breaking News

சிறீதரன் எம்.பி மற்றும் ஐங்கரநேசனுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில்  இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


வடமராட்சி பிரதேசத்தில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அச்சுவரொட்டியில் "இரணைமடுவின் மேலதிக நீரை யாழ்ப்பாண மக்களுக்கு தரமாட்டோம் கடலில் விடுவோம்" எனக்குறிப்பிட்டு, இருவரது படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.சுவரொட்டியின் கீழ் யாழ்.மக்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.