Breaking News

இந்தியாவில் உலகக் கிண்ணப் போட்டிகள்

இந்தியாவில் 2016ஆம் ஆண்டு டுவென்டி- 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது. 

 20 ஓவர் உலக கிண்ணப் போட்டிகள் 2016-ஆம் ஆண்டு மார்ச் 11இல் ஆரம்பமாகி ஏப்ரல் 3ஆம் திகதி வரை நடைபெறுகிறது. நேற்று துபாயில் ஐ.சி.சி வாரியக் கூட்டத்தில் திகதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதே போன்று 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இங்கிலாந்தில் ஜூன் 1 முதல் 19-ஆம் திகதி வரை நடைபெறும்.

 இதேவேளை 2019ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட்டிகளும் இங்கிலாந்தில் மே 30-ஆம் திகதி முதல் ஜூன் 15-ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.