Breaking News

இலங்கையில் அரச சார்பற்ற அமைப்புகளுக்கான தடைகள் நீக்கம்

இலங்கையில் அரசசார்பற்ற அமைப்புக்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படமாட்டாது என்று பிரதம மந்திரி அலுவலகம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து அந்த அமைப்புக்கள் கருத்தரங்குகள் உட்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், பிரதமரின் செயலாளரை சந்தித்து கலந்துரையாடிய போது இதற்கான உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுற்றுநிருபம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.இதில், அரசசார்பற்ற அமைப்புக்கள். இலங்கையின் நீதியமைப்புக்குள் தமது பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.