Breaking News

மியன்மாரில் அவலப்படும் மக்களை காப்பாற்ற மட்டக்களப்பில் கையெழுத்து வேட்டை!

மியன்மார் அகதிகளுக்கு ஆதரவு தேடும் வகையில் கையெழுத்து பெறும் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை பகல் ஆரம்பிக்கப்பட்டது. 

"தேசத்தின் நண்பர்கள்" அமைப்பின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தின் இறுதியில் கையெழுத்துப் பத்திரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

இலங்கைப் பிரஜைகள் என்ற வகையில் மியன்மாரில் நடைபெற்றுவரும் வன்முறைகளை கண்டிப்பதுடன், அம் மக்கள் படும் துயரத்தினை எண்ணி மனம் வருந்துகிறோம். அம்மக்களின் மரணத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். அத்துடன், ஐக்கிய நாடுகள் மனிதாபிமானத்தினைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான தற்காலிக தங்குமிடத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.