Breaking News

மீண்டும் கிளம்பியது மஹிந்தவின் வெள்ளை வான்! -அச்சத்தில் மக்கள்

சிவில் உடையில் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வெள்ளை வான் ஒன்றில் துப்பாக்கியுடன் பயணித்த மூன்று இலங்கை இராணுவத்தினர் நேற்றிரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

மீரிஹான பகுதியில் வைத்தே நேற்றிரவு 7.30 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தாம்  இராணுவத்தில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் ஒருவரின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று, கைது செய்யப்பட்ட படையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான உண்மை நிலையை அறிய இராணுவ காவல்துறையுடன், பொலிஸார் தொடர்பு கொண்டுள்ளது.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக இராணுவ காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்றும், சம்பந்தப்பட்ட படையினர் தவறு செய்திருந்தால், அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில், போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வெள்ளை வானில் இலங்கை படையினர் சிவிலுடையில் பிடிபட்டுள்ளது இதனால் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது.

தேர்தலைக் குழப்பும் இரகசியத் திட்டம் ஏதும் முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது.அதேவேளை, பிடிபட்ட படையினர் மேஜர் ஜெனரல் ஒருவரின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ள போதிலும், அவர் யார் என்பது தெரியவரவில்லை.