Breaking News

தனி­யொரு கட்­சியின் தன்­னிச்­சை­யான செயற்­பாடு கூட்­ட­மைப்பின் மீதான நம்­பிக்­கையை சீர்­கு­லைக்கும்

தமி­ழ­ரசுக் கட்­சியின் தன்­னிச்­சை­யான செயற்­பாட்டின் கார­ண­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­லுள்ள பங்­காளிக் கட்­சி­களின் மீதான மக்கள் நம்­பிக்கை சீர்­கு­லைக்­கப்­பட்­டு­விடும் என கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் ஈ.பி.ஆர்.எல்.எப். தலை­வ­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் சுட்­டிக்­காட்­டி­யுள் ளார்.

அதே­நேரம் தன்­மீது நம்­பிக்கை வைத்து வாக்­க­ளித்த பொது­மக்­க­ளுக்கும் கட்சித் தலைவர் என்ற அடிப்­ப­டை­யிலும் தற்­போ­துள்ள கால கட்­டத்தின் பிர­காரம் எனது காத்­தி­ர­மான பங்­க­ளிப்பு தேவை என்று கரு­தும்­ நி­லை­யிலும் பல்­வேறு அமைப்­புக்­களும் தரப்­பி­னரும் தேசியப் பட்­டியல் பிர­தி­நி­தித்­துவம் எனக்கு அளிக்­கப்­ப­ட­வேண்டும் என அழுத்­த­மாகக் கோரிக்கை விடுத்­தனர். 

அவர்­க­ளுக்கும் எனது மனப்­பூர்­வ­மான நன்­றி­யைத் தெரி­வித்துக் கொள்­கிறேன் எனவும் குறிப்­பிட்டார்.தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் கோப்பாய் அலு­வ­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­ வது,

நடை­பெற்று முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வட, ­கி­ழக்குத் தமிழ் மக்கள் ஒன்­று­பட்டு தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கு தமது ஆணையை வழங்­கி­யுள்­ளார்கள். தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு என்­பது தமி­ழ­ரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., பு .ௌாட் ரெலோ ஆகிய நான்கு கட்­சி­களின் கூட்­ட­மைப்­பாகும். தேர்­தலில் தமி­ழ­ர­சுக் ­கட்­சியின் சின்­னத்தைப் பயன்­ப­டுத்தி போட்­டி­யிட்­டி­ருந்­தாலும் தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்­புக்கே மக்கள் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். வட­கி­ழக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு 14 ஆச­னங்கள் இத் தேர்­தலில் கிடைத்­தி­ருந்­தன. இலங்கைத் தமி­ழ­ர­சுக் ­கட்சி 8 ஆச­னங்­க­ளையும் பங்­கா­ளிக்­ கட்­சிகள் மூன்றும் தலா இரண்டு ஆச­னங்கள் வீதம் 6 ஆச­னங்­க­ளையும் பெற்­றி­ருந்­தன. இ­வற்றின் அடிப்­ப­டை­யி­லேயே தான் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கு இரண்டு தேசி­யப்­பட்­டியல் ஆச­னங்கள் கிடைத்­தி­ருந்­தன.

அந்த ஆச­னங்­க­ளுக்கு கட்சித் தலைவர் என்ற அடிப்­ப­டை­யிலும் தற்­போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான பேச்­சு­வார்த்தை இடம்­பெறும் சூழ்­நிலை ஒன்று ஏற்­ப­டு­வ­தற்­கான நிலை­மைகள் இருப்­பதால் அதில் எனது காத்­தி­ர­மான பங்­க­ளிப்பு தேவை எனவும் பங்­கா­ளிக்­கட்­சி­களும் பல்­வேறு அமைப்­புக்­களும் தரப்­பி­னர்­களும் வலி­யு­றுத்­தினர். 

ஆனால் தமி­ழ­ர­சுக்­கட்சி தன்­னிச்­சை­யாக முடி­வு­களை எடுத்­துள்­ள­தோடு அதனை நியா­யப்­ப­டுத்தும் வகையில் கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றது.நாம் பெண் பிர­தி­நிதித்­துவம் ஒன்று தேவை என்ற கருத்­து க்கோ அல்­லது திரு­மலை மாவட்­டத்­திற்கு மேலும் ஒரு பிர­தி­நி­தித்­துவம் அவ­சியம் என்ற கருத்­துக்கோ எதி­ரா­ன­வர்கள் அல்லர். ஆனால் கூட்­ட­மைப்பின் ஏக முடி­வாக அவை அமைந்­தி­ருக்­க­வேண்டும்.

அதனை விடுத்து தன்­னிச்­சை­யான முடி­வுகள் எடுக்­கப்­பட்டு அதனை கூட்­ட­மைப்பின் முடி­வாக காண்­பிக்க முயல்­வது தவ­றா­ன­தாகும். இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்சி தன்­னிச்­சை­யாக செயற்­ப­டு­மாக இருந்தால் கூட்­ட­மைப்பில் இயங்கும் பங்­கா­ளிக் ­கட்­சிகள் மீதும் ஒட்­டு­மொத்த தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் மீதும் உள்ள பொதுமக்கள் நம்பிக்கை சீர்குலைக்கப்பட்டுவிடும்.

ஆகவே தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு தேசியப்பட்டியல் பிரதிநிதித் துவங்களைத் தெரிவுசெய்தல், முன் வைக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாப னத்தை நடைமுறைப்படுத்தல், இனப் பிரச்சினைக்கான தீர்வுபோன்ற விட யங்களில் தனித்துவமாக காட்டுவதற் காக தன்னிச்சையாக தனியொரு கட்சி செயற்படுவதை விடுத்து கூட்டமைப் பாக ஒற்றுமையுடன் செயற்பட வேண் டும் என்றார்