Breaking News

தமிழக முதலமைச்சருக்கு நாங்கள் பயமில்லை – மஹிந்த அமரவீர



தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாங்கள் பயமில்லை என்றும், கடல் எல்லைகளை மீறுகின்ற மீனவர்கள் கைதுசெய்யப்படுவது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்பதுடன் அத்துமீறுகின்ற மீனவர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும் என்றும் மீன்பிடித்துறை மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மீன்பிடித்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மீன்பிடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மீனவர்களுக்கு சட்டம் தொடர்பிலான ஒரு தெளிவுப்படுத்தல் அவசியமாகின்றது. சட்டத்தை மீறுகின்ற மீன்பிடி படகுகளின் அனுமதிப்பத்திரத்தை இரத்துசெய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.