Breaking News

வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் நிதிப்பங்களிப்பில் 14 வீடுகள் கையளிப்பு

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனின் அமைச்சின் வீட்டுத்திட்ட நிதிப்பங்களிப்பில் வடமாகாணம் முழுவதும் 14 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.


ஒரு வீடு 7இலட்சத்து 65ஆயிரம் ரூபாய் பெறுமதியில் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்றைய தினம் நவாலிப்பகுதியிலுள்ள பயனாளிக்கு முதலமைச்சர் வீட்டை கையளித்தார்.

வீட்டுத்திட்டமானது மன்னாரில் 2 வீடுகளும், கிளிநொச்சியில் 2 வீடுகளும், வவுனியாவில் 1 வீடும், முல்லைதீவில் 1 வீடும், யாழ்ப்பாணத்தில் 8 வீடுகளும் கையளிக்கப்பட்டுள்ளன.வறுமையில் உள்ளவர்கள் மற்றும் ஏனைய திட்டங்களில் உள்வாங்கப்படாதவர்கள், போரில் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் நேற்றைய தினம் 14 வீடுகளில் முதலாவது வீடு கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன் அந்த வீட்டிற்றாக முழு நிதியையும் வடமாகாண முதலமைச்சரின் நிதியுதவி மற்றும் முதலமைச்சின் வீடமைப்புத்திட்ட நிதி பங்களிப்புடன் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டினை பெற்றுக்கொண்ட கணவன், மனைவி இருவரும் அங்கவீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.