Breaking News

வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக 50 தொழிங்சங்கங்கள் போராட்டம்?

தேசிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 50 தொழிற்சங்கங்கள், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.

அரச ஊழியர்களின் சில அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்தே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணி கூறியுள்ளது.

அடுத்த வருடம் முதல் அரச சேவையில் இணைக்கப்படுவோருக்கான ஒய்வூதிய குறைப்பு, 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை அடிப்படை சம்பளத்துடன் இணைங்காமை, ஊழியர் சேமலாப மற்றும் நம்பிக்கை நிதியங்களை இணைத்தல் உள்ளிட்ட விடயங்களை முன்வைத்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தநிலையில் கொழும்பில் இன்று திங்கட்கிழமை ஒன்றுகூடும் 50ற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள், கலந்துரையாடி தொழிற்சங்க நடவடிக்கை குறித்த இறுதித் தீர்மானத்தை எடுக்கும் எனவும் தேசிய தொழிற்சங்க முன்னணி கூறியுள்ளது.