Breaking News

யாழில் இன்று சூதாட்ட விடுதி சுற்றிவளைப்பு அறுவர் கைது

யாழ்ப்பாணம் ஊர்காவல்துறைப்பகுதியில் சூதாட்ட
விடுதி ஒன்றில் அறுவர்
கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் அறிய வருவதாவது,

ஊலர்காவல்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புளியங்கூடல் கிராமத்தில் உள்ள சுரவில் பகுதியில் செயற்பட்டு வந்த சூதாட்டமையம் ஒன்று சுற்றி வழைக்கப்பட்டு பொலீசாரால் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளையும் சேர்ந்த பல சூதாட்டக்காரர்கள் பல இலட்சம் ரூபாய்கள் வைத்து அந்த பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பொலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அந்த பகுதி சுற்றிவழைக்கப்பட்டதாக பொலீஸ் தரப்பிலிருந்து அறியவருகின்றது.

இன்றைய சுற்றிவழைப்பின்போது கைது செய்யப்பட்டவர்களில் இருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் மூவர் புளியங்சூடல் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் நாரந்தனை பகுதியை சேர்ந்தவர் என்றும் மேலும் தெரிய வந்துள்ளது. மேலும் சிலர் தலைமறைவாகியுள்ளதாகவும் தமிழ்கிங்டொம் தளத்திற்கு தெரியவருகின்றது.

குறித்த பகுதி புளியங்கூடல் மக்களின் சுடுகாட்டுப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.