Breaking News

எல்லை தாண்டியதாக கூறப்படும் 8 மீனவர்கள் கைது

இந்திய மீனவர்கள் எட்டுப் பேரைக் கைதுசெய்துள்ளதாக, யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா இன்று தெரிவித்துள்ளார்.

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் இரு படகுகளில் எட்டு மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போதே காங்கேசன்துறை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த இவர்களை விசாரணையின் பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.