Breaking News

பிள்ளையானின் விளக்க மறியல் மீளவும் நீடிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16ம் திகதி வரையில் விளக்க மறியல் காலத்தை நீடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு இன்று காலை அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளையான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்இ எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டுள்ளார்.