Breaking News

சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – (படங்கள் இணைப்பு)

அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட யோசித ராஜபக்ச இன்று முன்னிரவு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

கடுவெல நீதிமன்றத்தினால் இன்று மாலை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட யோசித ராஜபக்ச, கைவிலங்கிடப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே அவர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.அதேவேளை, தனது மகன் கைவிலங்கிடப்பட்ட நிலையில், சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச் செல்லப்படுவதை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, கலங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது கண்களில் இருந்து நீர் பெருகியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.