Breaking News

இலங்கை வருகிறார் நியூஸிலாந்து பிரதமர்

நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகைத் தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் நியூஸிலாந்து பிரதமரின் விஜயம் எதிர்வரும் 23ஆம் திகதியளவில் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன்போது, நியூஸிலாந்து நிறுவனமொன்றின் முதலீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள விவசாய திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் நியூஸிலாந்து பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசின் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அதேவேளை, இலங்கையிலுள்ள நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் க்ரஹம் மோர்டன் அண்மையில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.