Breaking News

தலைவர் பிரபாகரன் படத்துடன் வேட்புமனு தாக்கல்!

இலங்கை தமிழ் தலைமைகளுக்கு கூட வராத தைரியம் இந்திய நாம் தமிழர் கட்சிக்கு வந்துள்ளது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தன்னுடைய பேச்சுக்களில் எல்லாம் ஈழத்தையும், பிரபாகரனையும் ஞாபகப்படுத்த மறப்பதில்லை. தற்போது மேலும் ஒரு சம்பவமும் நடைப்பெற்றுள்ளது.


அதாவது, இந்திய கும்பகோணத்தில், நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் வேட்பாளர் மணிசெந்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் படத்தை, திறந்த ஜீப்பில்வைத்து நகர் முழுவதும் ஊர்வலம் வந்துள்ளார். அவருன் இளைஞர்கள் பலர் ஊர்வலமாக வந்தனர். பின்பு மணிசெந்தில் தனது வேட்புமனுவை உரிய அதிகாரியிடம் தாக்கல் செய்தனர்.

இது குறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், எந்த படத்தை வைத்தால் இந்திய அரசு சிறைபிடிக்குமோ, தேசியபாதுகாப்பு குற்றத்தில் வழக்கு போடுமோ, அதே படத்தை ஊர் முழுவதும் பேரணியாய் எடுத்துச் சென்று, வேட்பாளர் மணிசெந்தில் அவர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம் என்றனர்.