Breaking News

இனவாதத்தால் மீண்டும் யுத்தம் ஏற்படலாம் – ஜே.வி.பி அச்சம்!



இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகள் நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு வழிகோலும் என ஜே.வி.பி எச்சரித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டில்வின் சில்வா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள யோசனையும், தெற்கில் மஹிந்த தலைமையிலான குழுவின் செயற்பாடுகளும் இனவாதத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளன.இது நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு வழியேற்படுத்தும்.

வடக்கு கிழக்கை பிரிக்கும் யோசனையில், அங்குள்ள மக்களின் எந்த தேவைகளும் பூர்த்திசெய்யப்பட போவதில்லை. இது நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் வகையிலேயே அமையும் எனவும் டில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.