Breaking News

இலங்கைக்கு வருகிறார் பான் கீ மூன்



ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த ஆண்டு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடந்துவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தை அரசாங்கம் வரவேற்கிறது. அதுபோன்று, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த ஆண்டு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று நம்புகிறேன்.

சிறிலங்காவின் முன்னேற்றங்கள் குறித்து ஆர்வம் கொண்டவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம். பாராட்டுக்களையும், சரியான விமர்சனங்களையும், ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம். இரண்டுமே, முன்னேற்றங்களுக்கு உதவியாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்