Breaking News

அரசியலுக்காக தமிழ் பேசும் சமூகங்களை மோதவிடுவதை அனுமதிக்க முடியாது



அரசியலுக்காக தமிழ்மொழி பேசும் இரண்டு சமூகங்களைத் தொடர்ந்து மோதவிடுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

மினுவாங்கொடையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறுபான்மை சமூகங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், தாம்சார்ந்த சமூகங்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் சமூக உள்ளக்கிடக்குகளை வெளிக்கொணர்ந்து, அதை நூலாக வெளியிடுவது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

30 ஆண்டுகால யுத்தத்தின் பின்னர் சமாதானம் மலர்ந்துள்ள நிலையில், தமிழ் - முஸ்லிம் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையிலும், எழுத்தாளர்கள் எழுத்துப்பணி செய்து தமது இலக்குகளை வென்றெடுக்க முடியும் என குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகள் தமது தேவைகளுக்கு மட்டும் ஊடகத்துறையினரை பயன்படுத்துவரை கைவிட வேண்டும் என அமைச்சர் ரிஷாட் பதியூதின் கேட்டுக்கொண்டார்.