Breaking News

கோட்டாபயவை சிம்மாசனம் ஏற்றுவதே நடைபவனியின் உள்நோக்கம்



கூட்டு எதிர்க் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெறும் பாதயாத்திரையின் பின்னால் உள்ள பிரதான இலக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை சிம்மாசனத்தில் அமர்த்துவதாகும் என இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பலத்தை இழக்கச் செய்து இந்த நோக்கத்தை கூட்டு எதிர்க் கட்சி அடைந்துகொள்ள முயற்சிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முயற்சி நாட்டின் ஜனநாயகத்துக்கும் 62 லட்சம் பொது மக்களினதும் வாழ்வுக்கு எச்சரிக்கையானது எனவும் சமீர பெரேரா மேலும் கூறியுள்ளார்.