கூட்டு எதிர்கட்சியின் மூன்றாம் நாள் பாத யாத்திரை ஆரம்பம்
நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்திற்கு எதிரான பாதயாத்திரை மூன்றாவது நாளான இன்று(சனிக்கிழமை) காலை கேகாலை நெலுந்தெனிய பகுதியில் ஆரம்பமாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 28ம் திகதி பேராதெனியவில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இந்த யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.
நேற்று மாவனல்லை, உதுவன்கந்த பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பாத யாத்திரை நெலும்தெனியவில் நிறைவடைந்திருந்தது.
இந்தநிலையில் நெலும்தெனியவில் இருந்து தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பாத யாத்திரை நிட்டம்புவை வரை செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, பாத யாத்திரையை நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி குற்றம் சுமத்தியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.