Breaking News

தெற்கில் தமிழர் தொகை அதிகரிக்கின்றது : பிரதமர்

வடக்கில் தமிழ் மக்களின் சனப்பரம்பல் தொகை குறைவடைந்து வருகின்றது உண்மைதான் எனினும் மேல்மாகாணத்திலும் கண்டி, மாத்தளை ஆகிய பகுதிகளிலும் தமிழ் மக்களின் தொகை அதிகரித்து வருகின்றது என பிரமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


விகிதாசார தேர்தல் முறைமையில் விளைவாக வடக்கில் அதிகமான தமிழர் பிரதிநிதித்துவங்களும் தெற்கில் அதிகமான சிங்கள பிரதிநிதித்துவங்களும் உருவாகின எனவே சுமூனமான அரசியல் சூழல் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவையும் உருவாகி உள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பம்பலபிட்டி ஹோட்டலில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி பழைய மாணவர்கள் சங்க ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம விருந்திரனராக பங்கேற்று உரையாற்று கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.