Breaking News

இராணுவத்தின் பிடியிலுள்ள மேலும் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு



யாழ்.தெல்லிப்பளையில் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளில் 454 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு இணங்கியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலுக்கு அமைவாக, குறித்த காணிகள் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த காணிகளில் மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான உதவிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை, மீள்குடியேற்ற அமைச்சு ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி மேலும் தெரிவித்துள்ளார்.