Breaking News

முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் இருந்த காணியில் மனித எச்சங்கள் மீட்பு



முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் அண்மையில் விடுவித்த காணியொன்றில்மேற்கொள்ளப்பட்ட தோண்டும் பணிகளின் போது மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.

இது குறித்து பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு சென்றுள்ள பொலிசார் குறித்த பகுதியை பாதுகாப்புப் பிரதேசமாக அடையாளப்படுத்தி அங்கு எவரையும் செல்லவேண்டாம் என தடை விதித்துள்ளனர்.

மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமினால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான மாரியம்மன் கோயிலுக்கு முன்னால் உள்ள வீடொன்றில் மலசல கூடத்திற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்தே இன்று இந்த மனித எச்சங்கள் வெளிவந்துள்ளன.

குறித்த காணியில் இராணுவ முகாம் இயங்கியதால் அங்கு மேலும் பல மனித எச்சங்கள் இருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.