Breaking News

சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதியாக நியமிக்க ஜனாதிபதி கனவு காணவில்லையாம்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இராணுவத் தளபதி பதவியைவழங்குவதற்கோ , தொழிற்சங்க நடவடிக்கைகளால் அத்தியாவசிய சேவைகள் தடைப்படும் போது, நிலைமையைக் கையாள்வதற்கான  குழுவுக்கு பொறுப்பாக நியமிப்பதற்கோ சிறிலங்கா அதிபர் கனவு காணவில்லை என்று அமைச்சர் ஜோன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.


சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “சிறிலங்கா அதிபர் நகைச்சுவையாகக் குறிப்பிட்ட கருத்துக்கு பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன.

வேலை நிறுத்தப் போராட்டங்கள் பற்றிப் பேசிய போது, இந்த நிலைமைகளை அமைச்சர் பொன்சேகாவினால் கட்டுப்படுத்த முடியுமா என்று தான் சிறிலங்கா அதிபர் நகைச்சுவையாக, கேட்டார் என்றும் அமைச்சர் ஜோன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.