Breaking News

காணமல் போனோர் தொடர்பான விபரங்களுடன் ஜனாதிபதியுடன் பேசவுள்ளேன் விக்னேஸ்வரன் (காணொளி)

காணமல் போனோர் தொடர்பான விபரங்களை ஒன்று திரட்டி ஜனாதிபதியுடன் பேசவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள், யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்தித்த பின் ஊடக ங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே வடக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், வடக்குக் கிழக்கில் போர ட்டங்களை நடாத்துவதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகக் கலந்துரை யாடியதுடன், காணாமல் போனோருக்குரிய தீர்வை நோக்கிய நகர்வுகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 

ஆணைக்குழுக்களில் மக்களால் கொடுக்கப்பட்ட வாக்குமூலங்கள் எவ்வாறு பதியப்பட்டுள்ளன என்பது தொடர்பில் ஆணைக்குழுவிடமிருந்து அறிக்கை கோரப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.