Breaking News

கண்ணிவெடிகளைப் புதைத்து மக்களை இலக்கு வைப்பது யார் - மாவட்ட அரசாங்க அதிபர்

கிளிநொச்சி   மாவட்டத்தில் 

முகமாலை மக்கள் நடமாடுகின்ற பகுதிகளில் மீண்டும் மீண்டும் கண்ணிவெடிகளைப் புதைக்கும் நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவ தாக  மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தகவல் தெரி வித்துள்ளார்.

இச் செயற்பாடு மீண்டும் முன்னெடுக்கப்படுதன் காரணம் குறித்து இதுவரை எதுவும் தெரியவரவில்லை எனவும் இதனால் மக்கள் அவயங்களையும் உயிர்களையும் இழந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூட த்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போதே அரசாங்க அதிபர் இவ் விடயத்தை முன் வைத்துள்ளார்.