Breaking News

விக்கியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு திட்டமாம் - வடக்கு மக்கள் அதிருப்தி

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டு அவருக்கு பதிலாக வேறொருவரை முதலமைச்சராக்கும் திட்டம் கட்சி க்குள் நிலவுகிறதா என்ற கேள்வி பொது மக்களால் எழுப்பப்பட்டுள்ளது.

வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், கட்சித் தலை மைப்பீடத்திற்கும் இடையே அண்மை க்காலமாக முரண்பட்ட கருத்து இரு ந்து வரும் நிலையில் அடுத்த மாகா ணசபைத் தேர்தலில் விக்னேஸ்வர னுக்குப் பதிலாக வேறொருவரே முத லமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படு வார் என கட்சித் தலைமைப்பீடம் அண்மைக்காலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் நேற்று முன்தினம் வடமாகாண சபையின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பி னரான எஸ். சுகிர்தன் தனது உரையில், "இன்று முதலமைச்சர் அரசியலில் எங்கோ வளர்ந்து கொண்டிருக்கின்றார். 

எமது மக்களுக்காக அவர் இனிவரும் காலத்தில் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். அடுத்த மாகாண சபைக்கு சிறந்த ஒருவர்  முதலமைச்ச ராக வர வேண்டும்." எனத் தெரிவித்தார்.  

சுகிர்தனின் இந்த உரை மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியு ள்ளதுடன் இந்த மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு முன் முத லமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பதிலாக வேறொருவரை முதலமைச்சராக்கி விட்டு முதலமைச்சர் விக்னேஸ்வரனை தேசிய பட்டியல் ஊடாக பாராளு மன்றத்திற்கு கொண்டு செல்லும் எண்ணம் கட்சித் தலைமைப் பீடத்திற்கு ஏற்ப ட்டுள்ளதா எனக் கேள்வியை எழுப்பியுள்ளனர்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவரது சேவையை வடபகுதி முழுவதற்கும் செய்வதையே தாங்கள் விரும்புவதாகவும் தற்போதைய நிலையில் கிழக்கி ற்கு ஏற்பட்ட நிலைமை வடக்கிற்கு ஏற்படாது ஒரளவாவது பெரும் தடுப்பு அரணாக விக்னேஸ்வரனே காணப்படுவதாகவும் அவரே தொடர்ந்தும் வடமா காண சபைக்கு முதலமைச்சராக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ள மக்கள் பாராளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று தேசி யத்தை இழந்து ஐக்கிய தேசியத்துடன் ஒன்றிணைந்த நிலையில் முதல மைச்சருக்கும் அந்த நிலைமை ஏற்பட்டு விடக் கூடாது அவர் தமிழ் தேசிய த்திற்காக தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டுமென விரும்புவதாக தெரி வித்துள்ளனர்.