Breaking News

கட்டுப்பாட்டை இழந்த உந்துருளியினால் ஒருவர் பலி; இன்னொருவர் படுகாயம் ! யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கோட்டைக்காடு பகுதியில் வேகக்கட்டுப்பாடு இன்றிச் செலுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் மின்கம்பத்துடன்மோதி விபத்து க்குள்ளாகி தீப்பிடித்ததில் அதில் பயணித்த ஒருவர் உடல் கருகிப் பலியா கியதுடன் இன்னொருவர் படுகாயம் அடைந்துள்ளனர். 

நேற்று பிற்பகல் இரண்டு மணியள வில் இவ் விபத்து இடம்பெற்றதுடன்  அனர்த்தத்தில் மோட்டார்சைக்கிளை  செலுத்திய இளைஞர் பலி  மற்றுமொ ரு இளைஞர் படுகாயமடைந்துள்ள தாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும் தெரிவிக்கையில், மரண வீடு ஒன்றிற்குச் சென்று விட்டு வட்டுக்கோட்டை-தெல்லிப்பழை வீதி வழியாக குறித்த இருவரும் பயணித்துள்ளனர். வேகக்கட்டுப்பாடு இன்றிச் செலுத்த ப்பட்ட மோட்டார்சைக்கிள் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் சந்திக்கு முன்னால் வீதியின் ஓரத்தில் காணப்பட்ட மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. 

இதன்போது மோட்டார்சைக்கிளைச் செலுத்தி வந்தவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே நினைவிழந்துள்ளார். இதன்போது உந்துருளியின் எரி பொருள் தாங்கி வெடித்து தீப்பிடித்துள்ளது. 

இதனால் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே எரிந்து பலியானார். இதே வேளை இவருடன் பயணித்த மற்றுமோர் இளைஞன் படுகாயமடைந்த நிலை யில் மக்களால் தீயிலிருந்து இழுத்தெடுக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாணம் குற்ற தடயவியல் பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸாருடன் இணைந்து சம்பவம் தொடர்பான விசார ணைகளை முன்னெடுத்துள்ளனர்.