Breaking News

ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் 11 பேர் படுகாயம் !

ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 11 பேர் படுகாய மடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான் கிழக்க பகுதியில் உள்ள ஜலாலாபாத் நாகரில் சேவ் தீ சில்ரன் என்னும் குழந்தைகள் பாது காப்பு அமைப்பு உள்ளது. இவ் அமை ப்பின் அருகே இன்று காலை தற்  கொலை படை தாக்குதல் நடத்தியு ள்ளதாகவும், 11 பேர் படுகாயமடை ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியா கியுள்ளன. இதனடிப்படையில் தற்போது ஆப்கானிஸ்தான் இராணுவத்தின ருக்கும், தீவிர வாத குழுக்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் இட ம்பெற்று வருகின்றன. இதனாலே தீவிர வாத அமைப்பு தற்கொலை படை தாக்குதல் நடத்தியிருக்கலாமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

எனினும் தற்கொலை படை தாக்குதல் குறித்து இதுவரை எந்த தீவிர வாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.