Breaking News

கஜேந்திரகுமார் மீது மாவை பாரிய குற்றச்சாட்டு!

அரசியல் சுயலாபங்களுக்காக ஒரு கட்சி ஆட்சியமைப்பதை தடுக்கும் வகை யில் மற்றவர்கள் செயற்பட கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசு கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். 

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவி க்கையில், 

நாங்கள் எமது கட்சி சார்ந்த உறுப்பினர்களை அமைதி காக்குமாறு கேட்டிருக்கி றோம். ஒற்றுமையாக செயற்படுமாறு கேட்டிருக்கிறோம். அதனை கஜேந்திர குமார் பொன்னம்பலம் மிரட்டல் என கூறுவது அவரின் சதி திட்டங்களுக்கு தடையாக அமையும் என்பதாலேயாகும். 

இரகசிய வாக்கெடுப்பை நாங்கள் நிராகரிக்கிறோம். காரணம் அது ஒரு அர்த்த மற்ற செயற்பாடாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 56 சபைகளில் 40 சபை களை கைப்பற்றியுள்ளது. 

வடக்கு, கிழக்கில் நாங்கள் பெரும்பான்மை பெற்றிருக்கிறோம். கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சி 2 சபைகளை மட்டுமே கைப்ப ற்றியிருக்கின்றது. ஆகவே நாங்கள் பெரும்பான்மை பெற்ற இடங்களில் ஆட்சி யமைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 

ஆகவே ஆட்சியமைக்கும் கட்சிகள் மற்றைய கட்சிகளுக்கு தடையாக இருக்க கூடாது. அவ்வாறு குழப்பினால் நாங்களும் குழப்பலாம். ஆனால் நாங்கள் அவ்வாறு சொல்லவுமில்லை. செய்யவும் மாட்டோம். 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த தடவை மட்டுமல்ல. ஒவ்வொரு தேர்த லிலும் எங்களை தோற்கடிப்பதாக கூறுகிறது. இப்போதும் எங்களை தோற்கடி ப்பதாக கூறுகிறார்கள். நாங்கள் வெற்றியடைந்தது போல் வேறு கட்சிகள் வெற்றி பெறவில்லை. 

எனவே எம்மை குழப்புவது அல்லது தோற்கடிக்க நினைப்பது தமிழ்த் தேச த்தின் எதிர்காலத்தை சிதைப்பதாக அமையும். மேலும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடுவதை நிறுத்த வேண்டும். இதனை நாங்கள் ஒரு கோரிக்கையாக முன்வைக்க விரும்புகி றோம். 

எங்களுடைய கட்சியிலிருந்து மற்றைய கட்சிகளுக்கு தாவுபவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்பது அச்சுறுத்தும் வகையிலான கருத்தல்ல. அனை வரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதற்காக சொன்ன கருத்தாகும். நாங்கள் வெற்றி பெற்ற சபைகளில் ஆட்சியமைக்கவுள்ளதாக தெரிவிக்கி ன்றார்கள்.  

இது ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடாகவே அமைகின்றது. அவ ர்களை போல் நாங்கள் செயற்படப்போவதில்லை. காரணம் எங்களிடம் 40 சபை கள் இருக்கின்றன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவது போல் இரகசிய வாக்கெடுப்பு என்பதை நாங்கள் நிராகரிக்கிறோம். இவ்வாறான இரகசிய வாக்கெடுப்பு அர்த்தமற்ற ஒன்றாகும். நாங்கள் ஆட்சியமைப்பதை அவர்கள் குழப்பாமல் இருக்கவேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.