Breaking News

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தியாகராசா சரவணபவன்!

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தியாகராசா சரவணபவனை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமனதாக தீர்மானித்துள்ளது. 

மாநகர முதல்வர் தெரிவு  தொடர்பாக, தமிழ் அரசுக் கட்சியின் செயலர் துரை ராஜசிங்கம் தலைமையிலான சந்தி ப்பொன்றில்  ஆராயப்பட்டபோது, மட்டக்களப்பு மாநகர முதல்வர் பத விக்கு தியாகராசா சரவணபவனை முன்மொழிவதென ஒருமனதாக தீர்மானம் எடுத்துள்ளனர். 

மட்டக்களப்பு மாநகரசபையில் அதிகளவு ஆசனங்களில் வெற்றி பெற்ற தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கு ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. 

இதற்கமைய, கல்லடி- 13ஆவது வட்டாரத்தில் இருந்து மட்டக்களப்பு மாநகர சபைக்கு அதிகப்படியான பெரும்பான்மை வாக்குகளுடன் தெரிவாகிய  தியாகராசா சரவணபவன் நியமிக்கப்படவுள்ளார். 48 வயதுடைய இவர், 1971 ஆம் ஆண்டு தொடக்கம், 1973ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாநகர முத ல்வராக பதவி வகித்த கந்தையா தியாகராசாவின் மகன் ஆவார். 

அதேவேளை, பிரதி முதல்வர் பதவி ரெலோவைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதெனவும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.