Breaking News

ஊழியர்கள் ஏன் இடை நிறுத்தப்பட்டார்கள்? விளக்கம் தெரிவித்த வங்கி !

ஹற்றன் நஷனல் வங்கியின் சமூக ஊடகக் கொள்கையை மீறிய குற்றச் சாட்டிலேயே கிளிநொச்சிக் கிளையின் உதவி முகாமையாளருக்கும் உத்தி யோகத்தர் ஒருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வங்கி முகா மைத்துவம் தெரிவித்துள்ளது. 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் ஹற்றன் நஷனல் வங்கியின் கிளிநொச்சி கிளையில் போரில் உயிரிழந்த பொது மக்க ளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இது தொடர்பில் தென்னிலங்கையில் ஏற் பட்ட கொந்தளிப்பையடுத்து அந்த வங்கிக் கிளையின் உதவி முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் ஒருவரும் முகாமைத்துவத்தால் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டு பணியிலிருந்து இடை நிறுத்தியுள்ளனா். 

இது தொடர்பில் ஹற்றன் நஷனல் வங்கியின் முகாமைத்துவம் தெரிவித்த தாவது, முழுமையான தகவல்களின் பின் புலத்தில் நோக்கினால் இதில் உள்ள சிக்கல் புரியும். 

தெற்கில் போர் வெற்றி விழா தொடர்பான நடவடிக்கைகளில் ஹற்றன் நஷ னல் வங்கி பங்கு கொள்வதில்லை. எமது வங்கி சமூக ஊடகக் கொள் கையை அறிமுகப்படுத்தியது. எந்தவொரு நிகழ்வு தொடர்பிலும் முகாமைத்துவத்தின் அனுமதியைப் பெறவேண்டும். 
அது சாதாரண நிகழ்வாக இருந்தாலும் சரி, அஞ்சலி நிகழ்வாக இருந்தாலும் சரி முகாமைத்துவத்தின் அனுமதி பெறப்படுவது கட்டாயமானது. வங்கிச் சீரு டையுடன் வங்கி தொடர்பற்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்ற அறிவுறுத்தல் உண்டு. 

தற்போது கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வும் அதனைக் காரணம் காட் டியே நடவடிக்கை எடுக்க முகாமைத்துவம் வற்புறுத்தப்பட்டது. எமது உத்தி யோகத்தர்கள் இருவரும் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்படவில்லை. அனுமதி பெறப்படாத நிகழ்வு ஒன்றை நடத்தியமை வங்கியின் சமூக ஊடகக் கொள் கையை மீறிய செயல் என்ற குற்றச்சாட்டிலேயே அவர்கள் இருவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டது. 

அந்த விசாரணையை நடத்திய வங்கியின் மனித வள அதிகாரி தமிழர். எனவே இன ரீதியான எந்தவொரு பழிவாங்கலும் இந்த விடயத்தில் பின்பற்றப்பட வில்லை. இது சம்பளத்துடன் கூடிய இடை நிறுத்தம். 

வங்கிகளில் உள்ளக விசாரணைகள் இந்த வழிமுறையுடன்தான் ஆரம்பிக்க வேண்டும். சமூக ஊடகக் கொள்கைகளை மீறியதுதான் குற்றச் சாட்டு. விசார ணைகள் நிறைவடைந்ததும் உரிய முடிவு வெளிப்படுத்தப்படும் என வங்கி யின் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.