Breaking News

திருமுறிகண்டியில் அடைத்த வேலியை இரவோடிரவாக அகற்றிய இராணுவம்.! (காணொளி)

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட் பட்ட திருமுறிகண்டியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா இராணுவ முகாமை விஸ்த ரிக்கும் நோக்கில் மேலதிகமான 300 ஏக்கர் காணியை சுவீகரிக்க மேற்கொண்ட முயற்சி முறியடிப்புச் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா இராணுவ கமாண்டோ படையினரால் மேற்கொள்ளப்பட்ட காணி சுவீகரிப்பு முயற்சிக்கு, பிரதேச மக்கள், மக்கள் பிரதி நிதிகளுடன் திரு முறிகண்டி கிராம அலுவலகர் பிரி வில் பொது மக்களின் காணிகள் மற் றும் அரச காணிகள் அடங்கலாக சுமார் 300ஏக்கர் காணியை சூழ அமைக்கப்பட்டு வந்த வேலியை இரவோடு இரவாக இராணுவத்தினர் பிடுங்கி எறிந்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட் பட்ட திருமுறிகண்டி கிராம அலுவலகர் பிரிவில் சுமார் 50 ஏக்கருக்கு மேற் பட்ட காணிகளை பல வந்தமாக கையகப்படுத்தி பாரிய இராணுவ முகா மொன்றை அமைத்துள்ள ஸ்ரீலங்கா இராணுவம் முகாமை விஸ்தரிக்கும் பணி யில் ஈடுபட்டுள்ளனா்.

தற்போது படைமுகாம் அமைந்துள்ள காணிக்கு மேலதிகமாக பொது மக்க ளுக்கும் – அரசுக்கும் சொந்தமான 300 ஏக்கர்காணியை நிரந்தரமாக சுவீகரிக் கும் நடவடிக்கையாக அக் காணிகளை சூழ பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனா்.

 ஸ்ரீலங்கா இராணுவத்தின் இந்த நடவடிக்கையை அவதானித்த பிரதேச மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர், சாந்திசிறிஸ்கந்தராஜா மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ பிறேமகாந்த உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் சகிதம் திருமுறிகண்டி இராணுவ முகாமுக்கு சென்று அங்குள்ள அதிகாரி களை அழைத்து காணி சுவீகரிப்பிற்கு எதிராக தமது கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

படை அதிகாரிகளுடனான இச்சந்திப்பின் போது, காணி சுவீகரிப்பை இராணு வம் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட மக்களும், மக்கள் பிரதி நிதிகளும், அதனையும் மீறி இராணுவம் வேலி அடைக்கும் பணியை தொடர்ந்தால் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளனா்.

எனினும் திருமுறிகண்டி இராணுவ முகாமின் கட்டளைத் தளபதி இல்லாத நிலையில் இரண்டாம் நிலை அதிகாரி மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களு டன் கலந்துரையாடியிருந்ததுடன், தனது மேலதிகாரிக்கு மக்களின் கோரிக் கைகளை தெரிவித்து அதற்கமைய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்றைய தினம் திருமுறிகண்டி படை முகாமுக்கு எதிரில் பல மணி நேரங்களாக முகாமிட்டிருந்த மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் களைந்துச் சென்றிருந்தனர்.

இந் நிலையிலேயே மே மாதம் 24 ஆம் திகதியும் நேற்றைய தினமும் இர வோடு இரவாக இராணுவம் பொதுமக்கள் மற்றும் அரசினது காணிகளை சுற்றி அமைத்திருந்த வேலியை அகற்றியுள்ளது.

இன்றைய தினம் அந்தப் பகுதிக்குசென்ற போது இதனை நேரில் கண்டதாக பிர தேச மக்கள் எமது தகவல் செய்தியாளருக்கு ஒருவருக்கு இச் செய்தியை தெரி வித்துள்ளாா்.