Breaking News

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; இனவாதத்தை தூண்டும் கோத்தா!

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் பொதுமக்களை நினைவு கூருவதற்கான தல்ல, மாறாக பேரினவாதத்தையும், பிரிவினவாதத்தையும் தூண்டும் செயல் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முள்ளரிவாய்க்கால் நினைவேந்தலில் கல ந்து கொண்டவர்களுக்கு இராணு வத்தினர் குளிர்பானம் வழங்கியமை குறித்து வானொலி நிகழ்ச்சியொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித் துள்ளார்.

”முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக் கொண்டவர்களுக்கு குளிர்பானம் வழங்கும் செயற்பாடு, இராணுவத்தினரின் தான் தோன்றித் தன மான செயற்பாடா அல்லது அரசாங்கத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டதா என தெரியவில்லை.

ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கோ அல்லது அதில் பங்கேற்றவர்களுக்கு குளிர்பானம் வழங்கவோ அரசாங்கம் அனுமதி யளித்திருக்கக் கூடாது. முள்ளிவாய்க்கால் நினைவு, பொதுமக்களை நினைவு கூருவதற்கானதல்ல.

மாறாக பேரினவாதத்தை தூண்டும் செயற்பாடாகவே இது அமைந்துள்ளது” எனத் தெரிவித்தார். இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியி டுவது குறித்து கருத்து பகிர்ந்துகொண்ட அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரிந்துரைத்தால், பசில் ராஜபக்ஷவின் ஆதரவுடன் தேர்தலில் போட் டியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு போட்டியிடும் பட்சத்தில் சிறுபான்மையினமான முஸ்லிம்களின் ஆதரவு தனக்கு பூரணமாக கிடைக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது டன், கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் தோல்விக்கு சிறு பான்மையினரின் ஆதரவின்மையே காரணம் எனத் தெரிவித்துள்ளாா்.