Breaking News

ஜனாதிபதி தலைமையிலான “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய வேலைத் திட்டம்.!

சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சியில் இன்று காலை நடை பெற்றது. 

கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டு மைதானத்தில் உலங்குவானுர்தியில் வந்திறங்கி கிளிநொச்சி மத்திய கல் லூரி மைதானத்துக்கு வந்த ஜனாதி பதியை, சிறுவர்கள் வெற்றிலை கொடுத்தும் தமிழர் பண்பாட்டை எடுத்தோம்பும் வகையில் இன்னியத் துடன் அழைத்துவரப்பட்டு சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத் திட் டம் மாநாடு நடைபெற்றது.

இந் நிகழ்வில் மதத் தலைவர்கள், வட மாகாண முதலமைச்சர், வட மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், அரசியல் பிர முகர்கள், அதிகாரிகள், முப்படையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்துள்ளனா்.