Breaking News

"ஆனந்தசுதா­க­ரனின் குழந்தைகளை ஏமாற்றிய - மைத்திரி"

ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்டு சிறை­யி­லுள்ள அர­சியல் கைதி­யான ஆனந்த சுதா­க­ரனை உட­ன­டி­யாக விடு­தலை செய்ய முடி­யாத நிலைமை காணப்­ப­டு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வடமாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ர­னிடம் தெரிவித்துள்ளாா்.

கிளி­நொச்­சியில் நேற்று நடை­பெற்ற சிறு­வர்­களை பாது­காப்போம் என்ற தேசிய செயற்­திட்ட மாநாட்டில் ஜனா­தி­பதி பங்­கேற்­றி­ருந்தார். இந்த நிகழ்வில் கலந்­து­கொண்ட முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் ஆனந்த சுதா­க­ரனின் விடு­தலை தொடர்பில் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

அவ­ரது மனைவி மனைவி உயி­ரி­ழந்­துள்­ள­மை­யினால் இரு பிள்­ளை­களும் பெரும் கஷ்ட்ங்­களை அனு­பித்து வரு­வ­தனால் அர­சியல் கைதி­யான ஆனந்த சுதா­க­ரனை விடு­விக்க வேண்டும் என்று முத­ல­மைச்சர் கேட்டுக் கொண்டார். மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் இந் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என் றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இதற்கு கருத்த தெரி­வித்த ஜனா­தி­பதி,

ஆனந்த சுதா­க­ரனைப் போல் பலர் சிறையில் உள்­ளனர். இவரை விடு­வித்தால் அவர்­களும் தம்மை விடு­விக்­கு­மாறு கோரு­வார்கள். இதனால் உட­ன­டி­யாக இதற்கு இட­ம­ளிக்­க­மு­டி­யாத நிலை உள்ளதெனத் தெரிவித்துள்ளாா்.

ஜனா­தி­ப­தியின் பதிலை அடுத்து கருத்து தெரி­வித்த முத­ல­மைச்சர் அவ்­வா­றாயின் ஆயுள் தண்­டனை கைதி­யான ஆனந்த சுதா­க­ரனை பிள்­ளைகள் அடிக்­கடி சென்று பார்க்­கக்­கூ­டிய வகையில் அருகில் உள்ள சிறைச்சாலை ஒன் றிற்கு மாற்றுமாரு கேட்டுள்ளார்.

இதற்கு இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி அதற்கான நடவடிக்கையினை எடுப்ப தாக வாக்குறுதியளித்துள்ளாா்.