Breaking News

தமிழ் மக்களை விலைகொடுத்து வாங்கும் செயற்பாடுகளில் ஸ்ரீலங்கா அரசும் இராணுவமும்.!

போரினால் பேரழிவை சந்தித்த தமிழ் மக்களை விலைகொடுத்து வாங்குவதற் கான நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா அரசும் இராணுவமும் ஈடுபட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.

புதுக்குடியிருப்பு விஸ்வமடு பிரதேச மக்களின் கண்ணீருடனான பிரியா விடை பெற்றுச்சென்று இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் திரு ம்பியுள்ள கேர்ணல் ரத்னப்பிரிய பந்து விற்கு விஸ்வமடு மக்கள் அளித்த உணர்ச்சி பிரவாகத்துடனான பிரியா விடை தொடர்பில் சுட்டிக்காட்டி முத லமைச்சர் இச் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு படையணியின் விஸ்வமடு முகாம் பொறுப்பதிகாரியான கேர்ணல் ரத்னப்பிரிய பந்து, அம்பேபுஸ்ஸ இரா ணுவ முகாமிற்கு இடம்மாற்றம் பெற்ற நிலையில் அவருக்கு பிரியாவிடை நிகழ்வொன்று நடாத்தப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட சிவில் பாதுகாப்பு படையணியிலும் அந்த படையணியால் நிர்வகிக்கப்படும் பண்ணைகளிலும் வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ள முன்னாள் போராளிகள், முன்னாள் போராளிகளது குடும்பத்தினர் ஆகியோர் கதறி அழுது கண்ணீர் மல்க கேர்ணல் பந்துவை இடமாற்றம் பெற்று செல்ல வேண்டாமென மன்றாடியுள்ளனா்.

இக் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட நிலையில் அனை வரிதும் கவனத்தை இந்த சம்பவம் ஈர்த்திருந்தது. இந்த நிலையில் இடம் மாற் றப்பட்ட கேர்ணல் பந்துவை, மீண்டும் விஸ்வமடு முகாமின் பொறுப்பதிகாரி யாக பணியமர்த்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பினரும், அரசாங்கத்தின் அமைச்சர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கமைய அவரது இடமாற்றத்தை இரத்துச்செய்த சிறிலங்கா அரச தலை வர் மைத்ரிபால சிறிசேன, கேர்ணல் பந்துவை சிறிலங்கா இராணுவதின் சிவில் பாதுகாப்பு படையணியின் விஸ்மடு முகாம் பொறுப்பதிகாரியாக மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளாா்.

சிறிலங்கா அரச தலைவரை அவரது சொந்த ஊரான பொலன்னறுவையில் வைத்து நேரில் சந்தித்த கேர்ணல் இரத்தனப்பிரிய பந்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

சிறிலங்கா அரச தலைவரின் புதல்வரான தஹாம் சிறிசேன பொலன்னறுவை யில் ஏற்பாடு செய்திருந்த மென்பந்து போட்டியை பார்வையிட சென்றிருந்த போது சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவை, கேர்ணல் பந்து நேரில் சந்தித்து இடமாற்றத்தை இரத்து செய்ததற்காக நன்றி தெரிவித்துள் ளாா்.

இச் சந்திப்பின் போது போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கேர்ணல் பந்து ஆற்றிய சேவையையும் சிறிலங்கா அரச தலைவர் பாராட்டியதாக அவ ரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று மாங்குளம் பகுதியில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர், கேர்ணல் பந்து போன்றவர்களு க்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றுவதற்காக பெருந் தொகை நிதி எங்கிருந்து என்ன நோக்கத்திற்காக கிடைக்கின்றது என்ற உண் மையை வெளிப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். .