Breaking News

இராணுவ கேர்ணலுக்கான பிரியாவிடையின் பின்னணியில் தெளிவுரைக்கும் முதலமைச்சர் (காணொளி)

போரினால் பேரழிவை சந்தித்த தமிழ் மக்களை விலை கொடுத்து வாங்கு வதற்காக ஸ்ரீலங்கா அரசும் இராணுவமும் ஆயத்தமாகி விட்டதாக  வடமா காண முதலமைச்சர் சந்தேகம் தெரிவித்துள்ளாா்.

புதுக்குடியிருப்பு விஸ்வமடு பிரதேச மக்களின் கண்ணீருடனான பிரியா விடை பெற்றுச் சென்று இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் திரும் பியுள்ள கேர்ணல் ரத்னப்பிரிய பந்து விற்கு விஸ்வமடு மக்கள் அளித்த உணர்ச்சி பிரவாகத்துடனான பிரியா விடை தொடர்பில் கோடிகாட்டி முதலமைச்சர் இச் சந்தேகத்தை எழுப்பி யுள்ளார்.

சிறிலங்கா இராணுவதின் சிவில் பாதுகாப்பு படையணியின்விஸ்மடு முகாம் பொறுப்பதிகாரியான கேர்ணல் ரத்னப்பிரிய பந்து,அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமிற்கு இடம்மாற்றம் பெற்ற நிலையில் அவருக்கு பிரியாவிடை நிகழ் வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் கலந்துகொண்ட சிவில் பாதுகாப்புபடையணியிலும் அந்த படை யணியால் நிர்வகிக்கப்படும் பண்ணைகளிலும் வேலைக்கு அமர்த்தப்பட் டுள்ள முன்னாள் போராளிகள், முன்னாள் போராளிகளது குடும்பத்தினர் ஆகி யோர் கதறி அழுது கண்ணீர் மல்க கேர்ணல் பந்துவை இடமாற்றம்பெற்று செல்ல வேண்டாமென மன்றாடியுள்ளனா்.

இந்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டநிலையில் அனை வரினதும் பாா்வையை இச் சம்பவம் திரும்பி பாா்க்க வைத்துள்ளது. இந்த நிலையில் இடம்மாற்றப்பட்ட கேர்ணல் பந்துவை, மீண்டும் விஸ்மடு முகா மின் பொறுப்பதிகாரியாக பணியமர்த்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சதலைமையிலான தரப்பினரும், அரசாங்கத்தின் அமைச்சர் களும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கமைய அவரது இடமாற்றத்தை இரத்துச்செய்த சிறிலங்கா அரச தலை வர் மைத்ரிபால சிறிசேன, கேர்ணல் பந்துவை சிறிலங்காஇராணுவதின் சிவில் பாதுகாப்பு படையணியின் விஸ்மடு முகாம் பொறுப்பதிகாரியாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளாா். 

சிறிலங்கா அரச தலைவரை அவரது சொந்த ஊரானபொலன்னறுவையில் வைத்து நேரில் சந்தித்த கேர்ணல் இரத்தனப்பிரிய பந்து நன்றி தெரிவித்துள் ளாா்.

சிறிலங்கா அரச தலைவரின் புதல்வரான தஹாம் சிறிசேன பொலன்னறுவை யில் ஏற்பாடு செய்திருந்த மென்பந்து கிறிக்கட் போட்டியை பார்வையிடச் சென்றிருந்த போது சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவை, கேர் ணல் பந்து நேரில் சந்தித்து இடமாற்றத்தை இரத்துச் செய்ததற்காக நன்றி தெரிவித்துள்ளாா்.

இச் சந்திப்பின் போது போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு கேர்ணல் பந்து ஆற்றிய சேவையையும் சிறிலங்கா அரச தலைவர் பாராட்டியதாக அவ ரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.

 இந் நிலையில் இன்று மாங்குளம் பகுதியில் நடைபெற்றவைபவமொன்றில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர், கேர்ணல் பந்து போன்றவர்க ளுக்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றுவதற்காக பெருந் தொகை நிதி எங்கிருந்து என்ன நோக்கத்திற்காக கிடைக்கின்றது என்ற உண்மை வெளிப்படுத்தப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளார். .