Breaking News

வசந்தவின் மனைவி கைது; துப்பாக்கி மீட்பு.!

மாத்தறை துப்பாக்கிசூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஹபரகட வசந்தவின் மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான்குணசேகர தெரிவித்துள்ளாா். 

மாத்தறையில் கடந்த 22 ஆம் திகதி நகை யகமொன்றில் கொள்ளையிட வந்த கும்ப லுக்கும் பொலிஸாருக்குமிடையில் இடம் பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் கொள் ளையர்களின் துப்பாக்கி சூட்டுக்கிலக்காகி பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்த துடன் மேலும் இவர் படுகாயமடைந்தனர். இந் நிலையில் ஹோமாகமவிலுள்ள இச் சம்பவத்துடன் தொடர்புடையவரான ஹபரகட வசந்தவின் வீட்டில் விசேட அதிரடிப் படையினர் மோற்கொண்ட சோதனையின்போது ரிவோல்வர் துப்பாக்கியையும், துப்பாக்கி ரவைகளையும் கைப்பற்றியுள்ளதுடன் வசந்தவின் மனைவியையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.