Breaking News

தூங்கிக்கொண்டிருந்த நாய் மீது ரோட்டு போட்ட சம்பவம் (காணொளி)

ரோட்டு போடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர்கள்,
சாலையின் ஓரத்தில் தூங்கிக்கொண்டிருந்த நாய் மீது ரோலர் இயந்திரத்தை ஏற்றியதால், நாய் உயிரிழந்துள்ளது. எனினும், இறந்த நாயின் உடலை அப்புறப்படுத்தாமல், அதன் மீது ரோடு போட்டுள்ளனர்.



இந்த சம்பவம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சமூக ஆர்வலர் ஒருவர், அந்த கட்டுமானப்பணியின் உயர் அதிகாரி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை தொடர்ந்து, ஆர்.பி. கன்ஸ்ட்ரக்சன்ஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


உயர் அதிகாரியிடம் நாய் இறந்து விட்டது குறித்து தெரிவித்தும், அவர் அலட்சியமாக இருந்து, நாய் மீது ரோடு போட உத்தரவிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், அந்த நாயின் உடலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்ட பின்னர், நாயின் உடலை அப்புறப்படுத்தினர்.