Breaking News

பொலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி-மல்லாகத்தில் சம்பவம்

மல்லாகம் சகாயமாதா கோவிலடியில் பொலிசார்
மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு இளைஞர் படுகாயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி மல்லாகம் சகாயமாத மாதா கோவிலடியில் இன்றிரவு இடம்பெற்ற இச் சம்பவத்தில் மல்லாகம் குழமங்காடு பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா சுதர்சன் என்ற இளைஞனே நெஞ்சில் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது வீதியில் இரு கும்பல்களுக்கு இடையே மோதல் இடம்பெற்றது. அதனைத் தடுக்க முற்பட்ட போது, பொலிஸாரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்ற இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டா். மற்றொருவரும் படுகாயமடைந்தார் என பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

பெருநாளுக்கு வந்தவரே சுடப்பட்டார்.

இதேவேளை பொலிஸ் தரப்புத் தகவலை மறுத்துள்ள பொதுமக்கள் சகாய மாதா ஆலயத்தில் பெருநாள் இடம்பெற்றது. அதில் பொதுமக்கள் கூடியிருந்தனர். அதில் கலந்துகொண்டிருந்த இளைஞர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.






இந்நிலையில் சகாய மாதா ஆலயத்தில் பெருநாளில் கலந்துகொண்ட மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் மல்லாகம் சகாய மாதா கோவிலடியில் வீதி போக்குவரத்து தடைப்பட்டதுடன் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.