Breaking News

விடுதலைப்புலிகளின் கொடி சீருடை உடன் இருவர் கைது ஒருவர் தப்பியோட்டம்.!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பேராறுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிக ளின் கொடி மற்றும் வெடி பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ள துடன் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

இவர்கள் இன்று காலை கைது செய்யப்பட் டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரி வித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிட மிருந்து 20கிலோ கிராம் கிளைமோரும், கைக்குண்டு 1, றிமோட் கொன்ரோல் 4, T56 ரவுன்ஸ் 98, விடுத லைப் புலிகளின் சீருடை 2, விடுதலைப்புலிகளின் புலிக்கொடி 40-45 கைப்பற்றப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி ஒன்றை பொலிஸார் சோதனையிட்டபோதே அதிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது ஒருவர் தப்பியோடியதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காட்டுக்குள் தப்பிச் சென்ற நபரை கைது செய்யும் பணியில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையம் அழைத்துவரப்பட்டு விசாரணை களை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

- நன்றி - ஐ.பி.சி இணையத்திற்கு.