Breaking News

மல்லாகம் துப்பாக்கிச்சூடு : சம்பவ இடத்தில் மனித உரிமை ஆணையாளர்.!

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ். மாவட்ட மனித உரிமை ஆணையாளர் கனகராஜ் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்றுள்ள மனித உரிமை ஆணையாளர் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட நபரின் உறவி னர்களிடமும், கைது செய்யப்பட்டவ ர்களின் உறவினர்களிடமும் சம்ப வம் தொடா்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுள்ளனா்.

மல்லாகம் சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு வர் இறந்த நிலையில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர். இதேவேளை, சம்பவத்துடன் தொர்பில் ஐந்து சந்தேக நபா்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனா்.