Breaking News

இலங்கை வரலாற்றில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய திருமணம்.!

திருமண செலவுகளை குறைத்து தான் படித்த பாடசாலைக்கு மைதான அரங்கொன்றை மணமகன் அமைத்துக் கொடுத்துள்ளார். 

திருமணத்தன்று அரங்கத்தை திறந்து வைத்து அதனை பாடசாலை பயன் பாட்டிற்கு வழங்குவதற்கான நடவடி க்கையை மணமக்கள் முன்னெடுத் துள்ள இச் சம்பவம் அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்கியுள் ளது. 

அஹுங்கல பத்திராஜகம பிரதேச த்தை சேர்ந்த மஞ்சுள பிரதீப் என்ற இளைஞனே இச் சேவையை செய்துள்ளார். கொழும்பில் உள்ள தனியார் நிறுவனத்தில் சேவை செய்யும் மஞ்சுள காதல் திருமணம் செய்துள்ளார். 

இத்திருமணத்தில் மதுபான விருந்துகளை நிறுத்தி, செலவுகளை கட்டுப்படு த்தி பாடசாலைக்கு மைதான அரங்கு அமைத்த முதல் இலங்கையராக அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். 

தற்போது மிகவும் ஆடம்பரமாக தமது கொண்டாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், மஞ்சுள தம்பதியின் செயற்பாடு பலருக்கு வியப்பை ஏற்ப டுத்தியுள்ளதோடு, அனைவரினதும் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெற் றுள்ளமை சிறப்பம்சமாகும்.

இத்தம்பதியினரை எமது இணையம் சார்பாக வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்.