Breaking News

போதைப் பொருள் விடயத்தில் தயங்­கிய பிர­தமர் - ரணில்.!

போதைப்­பொருள் கடத்தல்காரர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்கும் சட்­ட த்தை அமு­லுக்கு கொண்டு வரு­வதில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தயக்கம் தெரிவித்துள்ளாா். 

இச் சட்டம் அமு­லுக்கு வந்தால் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலு­கைக்கு பாதிப்பு ஏற்­படும். ஆகவே இது குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதன் பின்­னரே இறுதி முடி­வுக்கு வர வேண்டுமென  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்­டத்தில் நேற்று தெரி­வித்­துள்ளார். 

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்டம் நேற்று மாலை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அல­ரி­மா­ளி­கையில் கூடி­யது. இக் கூட்­டத்தில் ஐக்­கிய தேசியக் முன்­ன­ணியின் பங்­காளி கட்­சி­களின் தலை­வர்­களும் கலந்து கொண்­டனர். 

இவ்­வா­ரத்­திற்­கான பாரா­ளு­மன்ற அலு­வல்கள் குறித்து விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கையின் செய்தி குறித்து ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் கொண்டு வர­வுள்ள சபை ஒத்­தி­வைப்பு வேளை மீதான விவா­தத்­திற்கு தயா­ரா­கு­வது குறித்து ஆரா­யப்­பட்­டுள்­ளது. 

மேலும் சிங்­கப்பூர் உடன்­ப­டிக்கை ஒப்­பந்த தொடர்­பாக விவா­தத்­திற்கு தயா­ரா­கு­வது குறித்தும் ஆரா­யப்­பட்­டுள்­ளது. இதன்­போது ஐக்­கிய தேசி­ய ­கட்­சியின் தொழிற்­சங்க செய­லா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான அஜித் பீ பெரேரா எழுந்து நாட்டில் மரண தண்­ட­னையை அமு­லுக்கு கொண்டு வரு­வது தொட ர்பில் பிர­த­மரின் நிலைப்­பாட்டை வின­வினார். 

மேலும்,

மரண தண்­ட­னையை அமு­லுக்கு கொண்டு வரு­வதில் பெரும் சிக்கல் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் விரி­வாக ஆராய வேண்­டி­யுள்­ளது. மரண தண்­டனை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு ஐரோப்­பிய ஒன்­றியம் கடு­மை­யான எதிர்ப்­பினை வெளி­யிட்­டுள்­ளது. 

ஆகவே இந்த சட்டம் அமு­லுக்கு வந்தால் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலு­கைக்கு பெரும் சிக்கல் நிலைமை ஏற்­படும். ஆகவே இது தொடர்­பாக பேச்­சு­வார்த்தை நடத்­தியே முடிவு எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா். 

பாரி­ய­ள­வி­லான போதைப்­பொருள் கடத்தல் கா­ரர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்க வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த அமைச்­ச­ரவை கூட்­டத்தின் போது யோசனை முன்­வைத்­த­துடன் அந்த யோசனை ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. 

இந்­நி­லையில் அந்த சட்­டத்தை அமு­லுக்கு கொண்டு வர வேண்டுமென அஸ்­கி­ரிய, மல்வத்து பெளத்த பீடங்கள் உட்பட பெளத்த அமைப்புகள் பலதும் கோரி க்கை விடுத்துள்ளன. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் மரண தண்ட னையை அமுலுக்கு கொண்டு வரவேண்டாமெனத் தெரிவித்துள்ளாா்.