Breaking News

விக்கி மீது குற்றச்சாட்டு - சுமந்திரன்

வடக்கு மாகாண சபையில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அமைச்­ச­ரவை தொடர்­பான பிரச்­ச­னைக்கு நீதி­மன்றம் வழ ங்­கிய தீர்ப்பை அப்­ப­டியே அமுல்­ப­டுத்­தினால் தீர்­வு­காண முடியும் என தெரி­வித்­துள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­திரன், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் வேண்­டு­மென்றே விளங்­க­வில்லை என்­பது போல பாசாங்கு செய்­வது தான் குழப்ப நிலைக்கு காரண மென குற்றம் சுமத்தியுள்ளாா். 

மேலும் மாகாண சபையில் பேசப்­படும் விட­யங்கள் தொடர்­பாக எவரும் விமர்­சிக்­கவோ அல்­லது விசா­ரணை செய்­யவோ அதி­காரம் கிடை­யாது எனவும் அவர் தெரி­வித்தார். யாழ்.சாவ­கச்­சே­ரியில் நேற்­றைய தினம் காலை இடம்­பெற்ற செய்­தி­யா­ளர்கள் சந்­திப்பில் செய்­தி­யா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் இவ்வாறு தெரிவித்துள்ளாா். 

கேள்வி: யாழ்ப்­பா­ணத்தில் அண்­மைக்­கா­ல­மாக வன்­முறைச் சம்­ப­வங்கள் அதி­க­ரித்­துள்­ளன. இந்­நி­லையில் அண்­மையில் சட்ட ஒழுங்கு அமைச்சர், பொலிஸ்மா அதிபர் ஆகியோர் வந்து சென்ற பிறகும் அந்த நிலைமை நீடிக்­கின்­றதே ? 

பதில்: இச் சம்­ப­வங்­களைக் கட்­டுப்­ப­டுத்த மாகாண சபைக்கு சட்ட ஒழுங்­கா­னது முறை­யாக பகி­ரப்­பட வேண்டும். அத்­தோடு இப் பிர­தே­சத்­தி­லுள்ள பொலி ஸார் இப் பிர­தே­சத்­திற்­கு­ரிய மொழி­யினை சொந்த மொழி­யாகக் கொண்­ட­வர்­க­ளாக இருக்க வேண்டும். அவ்­வாறு இல்லை என்றால் இச் சம்­ப­வங்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வது மிகக் கடி­ன­மா­ன­தாகும். 

அந்த நிலைமை ஏற்­படும் வரையில் நாம் பார்த்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாது. சட்ட ஒழுங்கு அதி­கா­ரத்தை கைகளில் வைத்­தி­ருக்­கின்ற மத்­திய அர­சா­னது விரைந்து நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்­பாக நாம் கடு­மை­யான அழுத்­தங்­களை பிர­யோ­கித்து வரு­கின்றோம். 

அத­னா­லேயே சட்ட ஒழுங்கு அமைச்சர் யாழ்ப்­பாணம் வந்தார் . இவ் வன்­முறைச் சம்­ப­வங்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பாக நாம் யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தரும் பிர­த­ம­ரு­டனும் பேச­வுள்ளோம். 

கேள்வி: வடக்கு மாகாண சபையின் அமைச்­ச­ரவை தொடர்­பாக நீதி­மன்றம் கட்­ட­ளை­யொன்றை வழங்­கிய பின்­னரும் தொடர்ந்தும் பிரச்­சினை காணப்­ப­டு­கின்­றதே ? 

பதில்: நீதி­மன்றம் வழங்­கிய கட்­ட­ளையில் எப் பிரச்­சினையும் இல்லை. அக் கட்­ட­ளையை அப்­ப­டியே அமுல்­ப­டுத்­தினால் சுமூ­க­மான மாகாண சபை ஆட்­சியை நடத்த முடியும். ஆனால் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் அதனை வேண்­டு­மென்றே விளக்­க­மில்லை என்­பது போல பாசாங்கு செய்து அதனை அமுல்­ப­டுத்­தா­மை­யா­லேயே தற்­போது குழப்ப நிலை நீடிக்­கின்­றது. 

கேள்வி: வடக்கு மாகாண பெண் அமைச்சர் ஒருவர் கைத் துப்­பாக்கி வைத்­தி­ருப்­ப­தாக உறுப்­பினர் அஸ்மின் கூறிய நிலையில் அது தொடர்­பாக அப்பெண் அமைச்சர் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளாரே ? 

பதில்: மாகாண சபையில் பேச்சு சுதந்திரம் இருப்பதாக சட்டத்தில் கூற ப் படுகின்றது. இந்நிலையில் மாகாண சபையில் பேசப்படுகின்ற விடயங் கள் தொடர்பாக எவருக்கும் விமர்சிக்கவோ அல்லது விசாரிக்கவோ அதி காரம் கிடையாதெனத் தெரிவித்துள்ளாா்.