Breaking News

கோர விபத்தில் தாய், இரு பெண் பிள்ளைகள் பலி ; மகன் காயம்.!

பொத்துவில் - அக்கறைப்பற்று வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் அவரது இரு மகள்களும் பலியாகியுள்ள நிலையில் மகன் காயமடைந்துள்ள தாக பொலிஸார் தெரிவித்துள்ளனா். 

குறித்த வீதியில் தாய், அவரது இரு மகள் மற்றும் மகனுடன் சென்று கொண்டிருந்த போது அவ் வீதியால் சென்ற காரொன்று அவர்கள் நால்வர் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் 34 வயதுடைய தாயும் 6 வயது மற்றும் 12 வயதுடைய பெண் பிள் ளைகள் இருவரும் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, சம்பவத்தில் காயமடை ந்த 11 வயதுடைய மகன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.