Breaking News

புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்காக ஜ.நாவில் ஒலித்த குரல்!!

அவுஸ்திரேலியா ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகள் தொடர்பான இணக் கப்பாடுகளை மீறி செயற்பட்டு வருவதாக ஏ.பி.சி தமிழ் ஒலி சார்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நேற்றைய தினம் உரையாற்றிய ரெபேக்க லிம் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்திருந்த பல இல ங்கை தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன. தமிழ் பெண்கள், ஆண்கள் உட் பட அவுஸ்திரேலியாவில் பிறந்த பிள்ளை களுக்கு தஞ்சம் வழங்குவது நிராகரிக்கப் பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இவர்கள் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவில் பாடசாலையில் பயின்று வந்த பிள்ளைகள் உட்பட 5 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பிறக்காத, அவுஸ்திரேலியாவில் பிறந்த பிள்ளைகளும் இதில் அடங்குகின்றனர் என ரெபேக்க லிம் தெரிவித்துள்ளாா்.